×

அரசு நிதி உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி கலந்தாய்வு

பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்க- நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாற் றுப் பணி கலந்தாய்வில் 4 பேர்களுக்கு பணிமாறுதல் ஆணையினை மாவட்டக் கல்வி அலுவலர் அண்ணா துரை வழங்கினார். பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 2023 ஆகஸ்டு 1ம்தேதி நிலவரப்படி, ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களை ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலை பள்ளிக ளில் காலியாகவுள்ள இடை நிலை ஆசிரியர் பணியி டங்களில் மாற்றுப் பணி மூலம் பணியமர்த்தி பெரம் பலூர் மாவட்டக் கல்வி அலு வலரால் (தொடக்க கல்வி) ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அலுவ லகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதிஉதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கான மாற்றுப் பணி கலந்தாய்வு, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண் ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி யில் பணிபுரியும் ஜார்ஜ் ஸ்டீபன் என்பவ ருக்கு, வேப்பந்தட்டை ஒன் றியம் காரியானூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயந்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங் கப்பட்டது. அதேபோல் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணி புரிந்து வந்த இயேசுமணி, ஹெலன் சாந்தகுமாரி, பிரபா சாந்தரூபி ஆகிய மூன்று இடைநிலை ஆசிரி யர்களும் அந்த பள்ளியில் இருந்து மாற்றுப் பணி மூலம், பெரம்பலூர் மாவட் டம், ஆலத்தூர் தாலுக்கா, பாடாலூர் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர். இதற்கான ஆணையினை பெரம் பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை வழங்கினார். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சிகளின் போது, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல ரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவல ரின் (தொடக்கக் கல்வி) நேர்முக உதவியாளர் சர வணசாமி, கண்காணிப் பாளர் பாஸ்கரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் கள் (பெரம்பலூர்) அருண் குமார், (வேப்பந்தட்டை) இளங்கோவன் உதவி யாளர் சிவசங்கரி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அரசு நிதி உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District Education Officer ,Anna Durai ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு...