×

மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியூ) கரூர் மின் வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் தனபால் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். இதில், நிர்வாகிகள் நெடுமாறன், சிஐடியூ ஜீவானந்தம், முருகேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். நிர்வாகி செல்வம் நன்றி கூறினார்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி ரூ. 5லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Karur ,Central Tamil Nadu Electrical Employees Union ,CITU ,Karur Electrical Circle ,Karur Power Board ,Subramanian ,Dinakaran ,
× RELATED ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது