×

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் பொன்குமார் பிறந்தநாளை கட்டுமான தொழிலாளர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம். அந்த அடிப்படையில், இந்த ஆண்டு கட்டுமான தொழிலாளர்கள் தினத்தை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும் தொழிலாளர்களின் நிலையும் என்ற தலைப்பில் திநகர், சர்.பிட்டி தியாகராய அரங்கில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் என்.சுந்தராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் பொறி எஸ்.ஜெகதீசன், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்புச் செயலாளர் எஸ்.யுவராஜ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். சமூக நீதி சத்திரியர் பேரவை இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி இளைஞரணிச் செயலாளர் வினோத் பொன்குமார், பொதுச் செயலாளர்கள் வி.சுப்பராயலு, ஜெகமுருகள், பொருளாளர் ஆர்.சேகர், துணைத் தலைவர்கள் பி.கே.மூர்த்தி, என்.லட்சுமணன், ஜெ.எல்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழக கட்டடத் தொழிலாளர் மத்திய சங்கம், கட்டுமான மற்றும் மனைத் தொழிலில் கூட்டமைப்பு, சமூக நீதி சத்திரியர் பேரவை ஆகிய இயக்கங்கள் இணைந்து நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Labor Party ,President ,Ponkumar ,CHENNAI ,Construction Workers Welfare Board ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவத்தில்...