×

23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்காவை குன்றத்தூர் போலீசார் பறிமுதல் செய்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். வெளி மாநிலங்களில் இருந்து இவ்வாறு கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை குன்றத்தூர் போலீசார், ஒரு இடத்தில் வைத்து இருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை அழிக்கும் பணியில் குன்றத்தூர் போலீசார் நேற்று ஈடுபட்டனர். அதன்படி, குன்றத்தூர் பகுதியில் உள்ள காலி இடத்தில் பள்ளம் தோண்டி அதில் பறிமுதல் செய்யப்பட்ட 23 டன் குட்காவை பள்ளம் தோண்டி கொட்டி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில், தீ வைத்து எரித்தனர்.

The post 23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Gutka ,Kunradur police ,Dinakaran ,
× RELATED 23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு