×

குட்கா கடத்திய வாலிபர் கைது

வாழப்பாடி, ஜூன் 29: வாழப்பாடி போலீசார் பேளூர் பிரிவு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில், மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்ேபாது அதில் ₹70ஆயிரம் மதிப்பிலான குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் கிராமத்தை சேர்ந்த சார்வன்குமார்(20) என்பது தெரிய வந்தது. இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இருந்து வாழப்பாடிக்கு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சார்வன்குமாரை போலீசார் கைது செய்து குட்கா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post குட்கா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vazhappadi ,Vazhappadi Police ,Belur Division Road ,Gutka ,Dinakaran ,
× RELATED வெயில் வாட்டி வந்த நிலையில்...