×

சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 5 பேர் கும்பல் கைது

தர்மபுரி, ஜூன் 29: அரூர் அடுத்த அள்ளாப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சேரன் (57). இவர் தனது தோட்டத்தில் சொட்டுநீர் பாசன குழாய் அமைத்திருந்தார். நேற்று முன்தினம், இவரது தோட்டத்தில் இருந்த சொட்டுநீர் பாசன குழாய்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சேரன் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழாய் திருட்டில் தொடர்புடைய பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (26), கோட்டப்பட்டி ஆனந்தராஜ் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோல், கோபிநாதம்பட்டி அருகே உள்ள தென்கரைகோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (50) என்பவரின் விவசாய நிலத்தில், சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய, பாளையம்புதூரைச் சேர்ந்த தண்டபாணி (27), செல்வகுமார்(27), சந்திரநல்லூர் லட்சுமணன்(42) ஆகிய 3 பேரை, கோபிநாதம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

The post சொட்டுநீர் பாசன குழாய்களை திருடிய 5 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Cheran ,Allapatti ,Arur ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது