×

தப்பி ஓடிய அதிமுக சாராய வியாபாரி 24 மணி நேரத்தில் கைது

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான பிரபல சாராய வியாபாரி மணிகண்டனை (42) நேற்று முன்தினம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர் காவல் நிலையத்திலிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை நெடுமானூர் கிராமம் ஏரிக்கரை அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 24 மணி நேரத்தில் மீண்டும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post தப்பி ஓடிய அதிமுக சாராய வியாபாரி 24 மணி நேரத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Manikandana ,Sesha Samudram ,Mundinam Sankarapuram ,Station ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற 6 பேர் கைது