- தெலுங்கானா கவர்னர்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- தெலுங்கானா
- கவர்னர்
- சி.பி. ராதாகிருஷ்ணன்
- ஆந்திர முதலமைச்சர்
- அமராவதி உண்டவல்லி
- அமைச்சர்
- லோகேஷ்
திருமலை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அமராவதி உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்றார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் அமைச்சர் லோகேஷ் வீட்டு வாசலில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு விஜயவாடாவில் உள்ள கனகதுர்கை கோயிலுக்கு சென்று அம்மனை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தரிசித்தார்.
பிறகு ஆளுநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ சந்திரபாபு நாயுடு வளர்ச்சி பணிகள் குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் மிக்கவர். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.
The post ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு appeared first on Dinakaran.