×

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

திருமலை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அமராவதி உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்றார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் அமைச்சர் லோகேஷ் வீட்டு வாசலில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு விஜயவாடாவில் உள்ள கனகதுர்கை கோயிலுக்கு சென்று அம்மனை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தரிசித்தார்.

பிறகு ஆளுநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ சந்திரபாபு நாயுடு வளர்ச்சி பணிகள் குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் மிக்கவர். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.

The post ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana Governor ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Telangana ,Governor ,CP Radhakrishnan ,Andhra Chief Minister ,Amaravati Undavalli ,Minister ,Lokesh ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...