×

நீட் மோசடி: ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 3-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 3-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

The post நீட் மோசடி: ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 3-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : NEET ,DMK ,Union Govt. ,CHENNAI ,union secretary ,C.V.M.P. ,Union government ,Ehilarasan ,MLA ,Union BJP government ,Dinakaran ,
× RELATED “தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட்,...