டி20 உலகக்கோப்பை அரையிறுதி, இந்தியா – இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள கயானாவில் மழை பெய்ய 80% வாய்ப்புள்ளதாக கணிப்பு. மழை காரணமாக நேற்றைய பயிற்சியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி. மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தியா (தொடரில் பெற்ற அதிக வெற்றியால்) இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய நேரப்படி இரவு 12.10 மணிக்குள் போட்டியை தொடங்க முடியாவிட்டால் ஆட்டம் ரத்தாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
The post டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா – இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு! appeared first on Dinakaran.