×

சாலையை சீரமைக்க கோரி தர்ணா

ராஜபாளையம், ஜூன் 27: ராஜபாளையம் வழியாக செல்லும் திருமங்கலம் செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலையை புதுப்பிக்கும் பணியை தாமதமின்றி உடனே துவங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையம் திருவில்லிபுத்தூர் பகுதியில் எட்டு இடங்களில் தர்ணா நடைபெற்றது.

ராஜபாளையம் நகரில் நகரச்செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரவி துவக்கி வைத்து பேசினார். தர்ணாவில் மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், வேலுச்சாமி மற்றும் காளிமுத்து, பாஸ்கர் வெள்ளைச்சாமி, சித்திரைக்கனி பாப்பையா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post சாலையை சீரமைக்க கோரி தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tarna ,Rajapaliam ,Thirumangala Sengkot National Highway ,Rajapalayam ,Communist Party of India ,Thiruvilliputur ,Dinakaran ,
× RELATED மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார்