×

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மாநில உரிமையில் அக்கறை செலுத்தும் தலைவர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனையை தருகிறது. எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைவிட வேண்டும்.

The post பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Balat ,DTV ,AP government ,Dinakaran ,Chennai ,AP ,Chief Minister ,Chandrababu Naidu ,
× RELATED பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்...