×

சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுவார். ஆனால் இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விசாரணை அலுவலராக காவல் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.

The post சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...