சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல. பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிட வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதை தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
The post பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.