×

சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 

சத்தியமங்கலம், ஜூன் 25: தீயணைப்பு மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பள்ளியில் தீப்பிடித்தால் வகுப்பறைகளில் இருந்து குழந்தைகளை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளி வகுப்பறையில் தீ விபத்து ஏற்படும்போது பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றுவது தீயை அணைப்பது குறித்து தத்ரூபமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி பள்ளி குழந்தைகள் முன் செய்து காண்பிக்கப்பட்டதால் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மேலும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் தரப்பில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் முகமதியர் துவக்கப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Mohammedan Primary School ,Sathyamangalam ,Fire Rescue and Disaster Management Department ,Sathyamangalam Muhammadan Primary School ,Sathyamangalam Fire ,Station ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...