×

விழிப்புணர்வு கூட்டம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பையம்பாடியில் உள்ள  சந்தோஷி கலை அறிவியல் கல்லூரியில் போக்சோ மற்றும் புகையிலை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ் அலுவலர்கள் காட்வின், ஏழுமலை முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரி மேலாளர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். மதுராந்தகம் டிஎஸ்பி பாரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்தும், புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துக்களையும் எடுத்துரைத்தார். இதில், சித்தாமூர் காவல் உதவி ஆய்வாளர் பக்தவச்சலம், சிறப்பு உதவி ஆய்வாளர் சிவராஜ், எழுத்தாளர் சசிகுமார் மற்றும்  மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்….

The post விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Santoshi College of Arts and Sciences ,Baiyambadi ,Chengalpattu district ,Maduraandakam ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...