×

கடைசி நேரத்தில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் நாட்டின் பல்வேறு இடங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அவதி

சென்னை: கடைசி நேரத்தில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் நாட்டின் பல்வேறு இடங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். முதுநிலை நீட் தேர்வு இன்று காலை தொடங்க இருந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணிக்கு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. வெளியூர்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு ஒத்திவைக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் முன்பே புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டையில் இருந்து ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு தேர்வு எழுத சென்ற 30 பேருக்கு அங்கு சென்றபிறகே தேர்வு ஒத்திவைப்பு தெரியவந்ததால் தமிழக மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

The post கடைசி நேரத்தில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் நாட்டின் பல்வேறு இடங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...