×

வீட்டுச்சுவர் ஓட்டையில் 32 நாகப்பாம்பு குட்டிகள்

திருமலை: வீட்டுச் சுவர் ஓட்டையில் 32 நாகப்பாம்பு குட்டிகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தியை சேர்ந்த மின்வாரிய எலக்ட்ரீஷியன் ராஜு. இவரது வீட்டில் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி இருப்பதை பார்த்து பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து பாம்பு பிடிக்கும் குழுவினர் பல மணிநேரம் போராடி ஒரு பெரிய நாகப்பாம்புடன் அதன் 32 குட்டிகளையும் பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். ஒரு வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டுச்சுவர் ஓட்டையில் 32 நாகப்பாம்பு குட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Nagapambu ,Thirumalai ,Raju ,Neru Basti ,Bhadratri Kottagu, Telangana ,Dinakaran ,
× RELATED பத்ராத்திரி கொத்தக்கூடம்...