×

விபத்து ஏற்படுத்தும் வகையில் புகை சாலையோரம் குப்பைகளை எரிக்கக்கூடாது: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

 

கரூர், ஜூன் 21: கரூர் மாவ ட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளின் சாலையோரத்தில் கொட்டி பின்னர் எரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சாலைப்பகுதிகளில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையின் காரணமாக விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக நடைபெற்று வருகிறது.எனவே, இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post விபத்து ஏற்படுத்தும் வகையில் புகை சாலையோரம் குப்பைகளை எரிக்கக்கூடாது: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...