×

கள்ளக்குறிச்சி சம்பவம் கண்டித்து பாஜ நாளை ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜ எப்போதும் உறுதுணையாக இருக்கும். வரும் 22ம் தேதி (நாளை) தமிழக பாஜ சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி சம்பவம் கண்டித்து பாஜ நாளை ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi incident ,Annamalai ,Chennai ,Tamil ,Nadu ,BJP ,President ,Kallakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...