×

மஞ்சளாறு அணை: 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: மஞ்சளாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் உபரிநீர் திறப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 94 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மஞ்சளாறு அணை: 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manchalaru Dam ,Theni ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்