×

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தல்..!!

டெல்லி: நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்டு ரூபாய் நோட்டுகளை வாகனத்தின் மீது கொட்டி மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது.

 

The post நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,National Examinations Agency ,Delhi ,Union Education Minister ,Dharmendra Pradhan ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...