×

போதையில் கணவர் டார்ச்சர் விஷ விதையை அரைத்து குடித்த இளம்பெண்

விருதுநகர், ஜூன் 19: விருதுநகர் அருகே போதையில் கணவர் டார்ச்சர் செய்ததால் மனைவி விஷ விதையை அரைத்து குடித்தார். விருதுநகர் அருகே சின்னராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(34). இவரது மனைவி சுகப்பிரியா(30). இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 3 வயதில் மகன் உள்ளான். மூர்த்தி பட்டாசு ஆலையில் டிரைவர் வேலை செய்து வருகிறார். திருமணம் முடித்த நாள் முதல் தினசரி மூர்த்தி குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு அடித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுகப்பிரியா விஷ விதைகளை அரைத்து குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் சுகப்பிரியா புகார் அளித்தார். போலீசார் கணவன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போதையில் கணவர் டார்ச்சர் விஷ விதையை அரைத்து குடித்த இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Murthy ,Chinnaramalingapuram ,Sugapriya ,
× RELATED பொருளாதாரத்தில்...