×

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் முருகேசன் காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (30), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுஜித் (7) கடந்த 2 மாதத்துக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தான். இதனால் முனுசாமி மன வேதனையில் இருந்து வந்தார். கடந்த 16ம்தேதி தர்மபுரி செந்தில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு முனுசாமி குடும்பத்தினருடன் வந்தார். அன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முனுசாமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Munusamy ,Bennagaram Murugesan Colony, Dharmapuri district ,Divya ,Sujith ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது