×

வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிச.16, 17ல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு..!!

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2021 மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவித்திருந்தார். இந்த நிதியாண்டில் மட்டும் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மட்டும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையருடன் வங்கி சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் திட்டமிட்டப்படி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை இத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்கவில்லை. ஒன்றிய அரசு உறுதி அளிக்காததால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் என நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வங்கி சேவைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  …

The post வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிச.16, 17ல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...