×
Saravana Stores

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்து வருவதும் வழக்கமாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான இயக்குனர் அலுவலகத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று நிபுணர்கள் சோதனையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலையத்துக்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் பயணிகளின் உடைமைகள் கூடுதலாக ஒரு முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

The post மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,
× RELATED மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல்...