×

மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு

வேலூர்: கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்டதால், நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி கணவன் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன்(29). மருந்து விற்பனையாளர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(24). வரதட்சணை கொடுமை காரணமாக 4 மாத கர்ப்பிணியாக இருந்த தமிழ்ச்செல்வி, கடந்த மார்ச் 7ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் பாலமுருகன் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பாலமுருகன் கைதாகி ஜாமீனில் வெளிேய வந்த மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த தாங்கல், கன்னிகாபுரம் பகுதிக்கு டூவீலரில் சென்று மது அருந்தியுள்ளார். போதை ஏறிய நிலையில் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து நடுரோட்டிலேயே தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

 

The post மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Balamurugan ,Saidappettai, Vellore ,Tamilchelvi ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...