குனா: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம், குனா பகுதியில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘விவசாயிகளுக்கான மரியாதையை உறுதி செய்த பிரதமர் மோடியின் முடிவை அனைத்து விவசாயிகளும் வரவேற்றுள்ளனர். தற்போது விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். விவசாயிகளின் முடிவை வரவேற்கிறேன். சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எனவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தான் முடிவு செய்யும்’ என்றார்….
The post விவசாயிகள் மீதான வழக்கு ரத்து குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யும்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.