×

குவைத்தில் 2ஆண்டுகளில் 1,400இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: குவைத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே பல்வேறு விபத்துகளில் 1,400 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2022-ல் குவைத்தில் 731 இந்தியத் தொழிலாளர்களும் 2023-ல் 708 இந்திய தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பிப்ரவரி.2-ல் வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. குவைத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களில் 1279 பேர், 2020-ல் 1,201 பேர் 2021-ல் கொரோனாவால் உயிரிழந்ததாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014-ல் இருந்து 2018 வரை குவைத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 2,932 பேர் பல காரணங்களால் மரணம் அடைந்துள்ளனர்.

The post குவைத்தில் 2ஆண்டுகளில் 1,400இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Ministry of External Affairs ,New Delhi ,Indians ,Parliament ,Dinakaran ,
× RELATED குவைத்திற்கு தான் செல்ல ஒன்றிய அரசு...