×

மயானத்திற்கு இடம் ஒதுக்ககோரி மூதாட்டி சடலத்துடன் பொதுமக்கள் மறியல்: ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு

பள்ளிப்பட்டு: மயானத்திற்கு இடம் ஒதுக்கித்தரகோரி சடலத்துடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மயிலர்வாடா வீரப்ப ரெட்டி கண்டிகை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு மயானம் இல்லாததால், கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அவதிப்படுகின்றனர். மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என  வருவாய் துறையினரிடம் பல ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று கிராமத்தை சேர்ந்த சஞ்சிவியம்மாள்(81) என்ற மூதாட்டி முதுமை காரணமாக இறந்தார். சடலத்தை புதைக்க இடவசதி இல்லாததால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சடலத்தை  எடுத்துக்கொண்டு சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகம் அருகில் திருத்தணி – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், அவர்கள் சமாதானம் அடையவில்லை. பின்னர் சாலையிலிருந்து ஓரமாக வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் மணிவாசகம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மயானத்திற்கு இடம்  ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று போராட்டம் நடத்தியவர்கள் மூதாட்டி சடலத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  …

The post மயானத்திற்கு இடம் ஒதுக்ககோரி மூதாட்டி சடலத்துடன் பொதுமக்கள் மறியல்: ஆர்.கே.பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : R. K.K. ,Mayanam ,R.R. K.K. ,Hutt Union ,Mailarvada ,
× RELATED 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு...