×

பசுபதிபாளையம் அருகே புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து பரிதாப பலி

 

கரூர், ஜூன் 12: கரூர் பசுபதிபாளையம் அருகே தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண், பாம்பு கடித்து இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் பி.வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பூர்ணம்(45). இவர், கடந்த 10ம்தேதி அன்று காலை அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று புல் அறுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பாம்பு ஒன்று கடித்து, பூர்ணம் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பசுபதிபாளையம் அருகே புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Pashupathipalayam ,Karur ,Pasupathipalayam ,Poornam ,P.Vellalapatti, Karur district ,
× RELATED கரூர் மாநாகராட்சி பகுதி ராணி மங்கம்மாள் சாலையில் மெகா பள்ளம்