×

கிராமங்கள் வாரியாக சந்தை வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: ஆட்சேபணைகள் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்

சென்னை: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக ஆட்சேபணைகள், கருத்துரைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று மதிப்பீட்டு துணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிப்பீட்டு துணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010ல், விதி 4(2)-ன் மைய மதிப்பீட்டு குழு 2024ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு மாவட்டத்தில் உள்ள வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக் குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

The post கிராமங்கள் வாரியாக சந்தை வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: ஆட்சேபணைகள் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...