- சோமன்னா, கர்நாடகா
- பாஜக அரசு
- பெங்களூர்
- கர்நாடக
- கர்நாடகா அரசு
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- உச்ச நீதிமன்றம்
- பாஜக
- தின மலர்
பெங்களூரு: காவிரி நீர் தொடர்பாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவருக்கு நீர்வளத்துறை ஒத்துக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து உரிய நீரை வழங்க மறுத்து வரும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையும் கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் புதிய ஒன்றிய அமைச்சர்கள் இலாகா நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேந்த பாஜக எம்.பி. சோமண்ணா நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவருக்கு ஜல்சந்தி துறை கொடுப்பதா? என கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சோமண்ணாவை நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமித்து இருப்பது மோசமான நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு நீர்வளத்துறை இலாகா ஒதுக்கீடு: பாஜக அரசின் மோசமான நடவடிக்கை என வலுக்கும் எதிர்ப்பு appeared first on Dinakaran.