×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ரூ.45.20 கோடி மதிப்பில் சொத்துகள் சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு. வழக்கில் கே.பி.அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகள்கள், உறவினர்கள் என 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக 10 பேர் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஜூன் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,K. B. Anbhaghan ,Chennai ,K. B. Anbhagan ,K. B. ,Mallika ,minister ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...