×

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் என்னும் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது. BanNEET இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

The post நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...