×

மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் ஊராட்சியில் தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட அன்னை அஞ்சுகம் நகர், குளக்கரை, அண்ணாநகர், ஆதிவாசிகள் காலனி, கஜரி குளம் ஆகிய பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக நிர்வாகிகள் டி.டி.தயாளன், பி.ராஜன், டி.சேகர், டி.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தேவிகா தயாளன் தலைமை வகித்து 1000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் டி.மகேந்திரன், ஜெ.அமலநாதன், கௌதமன், சாந்தகுமார், டி.டி.சந்திரமவுலி, எழுத்தர் சீனிவாசன், உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Annai Anjugam Nagar ,Kulakarai ,Anna Nagar ,Adivasi Colony ,Thiruvallur Union ,Water Kulam Panchayat ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்