×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.03 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று 67,320 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,919 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.03 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 6 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.03 கோடி appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumalayan Temple ,Tirupathi Elumalayan Temple ,Swami ,
× RELATED 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி...