×

நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!!

சென்னை: ஆக்ரோஷமான நாய்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் வகையில் நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாய்களை வகைப்படுத்துவது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி, விற்க தடை விதித்து ஒன்றிய கால்நடைத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜூன் 1-க்குள் நாய்களை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க ஒன்றிய கால்நடைத்துறை கோரியது. இந்திய கென்னல் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை அமைத்துதான் மக்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களிடம் கருத்துகளை கேட்கும் நடைமுறைகளை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post நாய்களை வகைப்படுத்துவது பற்றி முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,iCourt ,EU ,Dinakaran ,
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை