×

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (6ம் தேதி) காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Consumer Complaint Resolution Day ,Thiruvallur ,FAULT RESOLUTION ,PERIYAGUPPA ,KANCHIPURAM ,Consumer Problem Solving Day Meeting ,
× RELATED திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை