×

செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!!

சென்னை: செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிகள் வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதி இல்லாத நபர்கள் மூலம் செல்லப் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் அளித்த விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலிக்க அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு ஐகோர்ட் ஆணையிட்டது.

The post செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,ANIMAL ,
× RELATED செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய...