×

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு

மும்பை: அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார். தனது சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, “1,500 மணிநேர இந்த நீண்ட வாழ்க்கையில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி. இப்போது நான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக கருதப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கேதர் ஜாதவ் 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். இந்தியாவுக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடிய ஜாதவ், 1,389 மற்றும் 122 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 95 போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரை சதங்கள் உட்பட 1,208 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி சார்பில் மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் ஆடிய போட்டி கடைசி போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் அவர் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

The post அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kedar Jadhav ,Mumbai ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்