×

வாக்கு சேகரிப்பு கண்காணிப்பு பணி: ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையைக் கண்காணிக்க கோரிய வழக்கில் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையைக் கண்காணிக்க ஆணையம் கோரி மகிமைதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அரசியல் கட்சிகள் லாபத்துக்காக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்றன என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post வாக்கு சேகரிப்பு கண்காணிப்பு பணி: ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Mahimaidas ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...