×

சிகிச்சைக்கு பின் யானை வனப்பகுதியில் விடுவிப்பு

கோவை: கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. மருதமலை அடிவார வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. கீழே படுத்த நிலையில் இருந்த பெண் யானையை, கிரேன் உதவியுடன் பெல்ட் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய பெண் யானை தற்போது வனப்பகுதிக்குள் விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. பெண் யானையை வனத்துறையினர் டிரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post சிகிச்சைக்கு பின் யானை வனப்பகுதியில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marathamalai ,
× RELATED மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் பீதி