டெல்லி: தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.
The post தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும்: இந்தியா கூட்டணி மனு appeared first on Dinakaran.