சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவாகியுள்ளது என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று உச்சபட்ச மின் தேவை 4,769 மெகாவாட் மற்றும் மின் நுகர்வு 101.76 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மின் பகிர்மான கழகம், உட்சபட்ச மின் தேவைகளை சிறப்பாக தொடர்ந்து கையாண்டு வருகிறது.
The post சென்னையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று உச்சபட்ச மின் நுகர்வு பதிவு: மின்சார வாரியம் தகவல் appeared first on Dinakaran.