×

தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கட் கவுன்டர்கள்: தேர்தல் முடிவுக்கு பிறகு செயல்படும் என தகவல்

வேலூர்: ரயில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான வசதியாளர்களை பெற ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் எனப்படும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கூடுதலாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) மூலம் டிக்கெட் வழங்குவதற்கான வசதியாளர்களை தெற்கு ரயில்வே விரைவில் நியமிக்க உள்ளது. முன்னதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், ஏடிவிஎம்கள் மூலம் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை வழங்க ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. சென்னை கோட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட பழைய மற்றும் சேதமடைந்த ஏடிவிஎம்களுக்கு பதிலாக சமீபத்தில் புதிய ஏடிவிஎம்களை நிறுவ உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறும்போது, ‘தெற்கு ரயில்வே கூடுதலாக ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்கள் ஏடிவிஎம்கள் மூலம் டிக்கெட்டுகளை வழங்கும் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் அமைப்பு (யுடிஎஸ்) மொபைல் பயன்பாடு மூலம் டிஜிட்டல் டிக்கெட்டுகளை வழங்கும். இதன் மூலம், தாங்கள் செல்லும் ரயில் வருவதற்கு அரை மணி நேரம் முன்னதாக வந்தாலும் வரிசையில் காத்திருந்து டிக்கட் பெற்று ஓடிச் சென்று ரயிலில் ஏறும் அவல நிலைக்கு தள்ளப்படும் பயணிகளின் இடர்பாடு இதனால் தவிர்க்கப்படும்.

இருப்பினும், ஏடிவிஎம்கள் மூலம் டிக்கெட் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டுகள் தேவைப்படுகின்றன. பல பயணிகள் வாங்குவதில்லை. எனவே, ஏடிவிஎம்கள் மூலம் டிக்கெட் வழங்க ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் பல ஏடிவிஎம்கள் செயலிழந்தது. இதனால் வசதியாளர்களும் பணியில் இருந்து விலகினர்.

இந்த நிலையில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 47 ரயில் நிலையங்களில் 100 புதிய ஏடிவிஎம் இயந்திரங்களை நிறுவி, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அவர்களை ‘வசதியாளர்களாக’ அந்த இடத்தில் நியமிக்க தெற்கு ரயில்வே சென்னை கோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மேற்கண்ட வசதியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கட் கவுன்டர்கள்: தேர்தல் முடிவுக்கு பிறகு செயல்படும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Southern Railway Zone ,Vellore ,Dinakaran ,
× RELATED ரயில்ேவ மேம்பாலத்தில் பைக்...