- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி காரைக்கால்
- இந்திய வானிலையியல் துறை
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- கர்நாடக
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் கர்நாடகாவிலும் ஜூன் 2-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளை முதல் 3நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும், தென் தமிழ்நாட்டின் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.