×

மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது

 

மோகனூர், மே 27: மோகனூர் அருகே, கீழ்பாலப்பட்டி பகுதியில் காவிரி படுகையில் இருந்து டிப்பர் லாரியில் மணல் கடத்துவதாக, வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர். அவர்களை கண்டதும், டிப்பர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, மணலுடன் லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வந்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த பரமத்திவேலூர் பொய்யேரி பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர் சண்முகம் மகன் ரகு(35) என்பவரை, மோகனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளை சிறையிலடைத்தனர்.

The post மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Lorry ,Moganur ,Mohanur ,Cauvery ,Kylapalapatti ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர்...