×

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (25.05.2024) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

 

The post மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட...